Publish Date: Thu, 01 Feb 2024 (17:08 IST)
Updated Date: Thu, 01 Feb 2024 (17:10 IST)
நாடாளுமன்றத்தில் சிஏஏ சட்டம் குறித்த வாக்கெடுப்பின்போது ஆதரவாக வாக்களித்த அதிமுக தற்போது சிஏஏ சட்டத்தை எதிர்ப்பதாக கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு இந்த கேள்வியை அதிபுத்திசாலி ஆன எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அறிவாளியான ஜெயக்குமார் இடம் கேளுங்கள் என்று செய்தியாளர்களிடம் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்தார்.
மேலும் எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து இன்னும் ஒரு சில நாளில் தான் அறிவிக்க இருப்பதாகவும் தற்போது பாஜக அணியில் தான் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இரட்டை இலை பிரச்சனை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாகவும் விரைவில் அந்த வழக்கு முடிவுக்கு வரும் என்றுதான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தனி அணியாக அமைத்து பாஜகவுடன் கூட்டணி சேருவாரா அல்லது பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்வாரா என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தெரிந்துவிடும் என்று கூறப்படுகிறது.