தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: ஆட்சியர்களுக்கு அரசு முக்கிய அறிவுறுத்தல்கள்

Mahendran
செவ்வாய், 25 நவம்பர் 2025 (15:50 IST)
வங்கக்கடலில் இலங்கைக்கு தெற்கே உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தமிழக கடலோரத்தை நோக்கி நகரக்கூடும் என்பதால், நவம்பர் 28 முதல் 30 வரை டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
இதை தொடர்ந்து, வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் எம். சாய்குமார், டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.
 
வெள்ள நிவாரண மையங்களை தயார் நிலையில் வைப்பது, நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவது, மின்சார பொருட்களை தயார் நிலையில் வைப்பது குறித்து அவர் அறிவுறுத்தினார்.
 
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர் நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படை விழுப்புரம் மாவட்டத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

19 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது.. கிராம பஞ்சாயத்து தலைவர் வேடத்தில் இருந்ததாக தகவல்..!

ஒபாமா மனைவியின் புதிய போட்டோஷூட்.. இவ்வளவு ஒல்லியாக மாறியது எப்படி? நெட்டிசன்கள் சந்தேகம்..!

ரூ.2,500 கோடி கொகைன் கடத்தல்: துபாய்க்கு தப்பியோடிய முக்கிய குற்றவாளி கைது! இந்தியாவுக்கு நாடு கடத்தலா?

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள்.. கால நீட்டிப்பு வழங்கப்படாது..!

பள்ளி கட்டடத்தில் இருந்து குதித்து 10-ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு.. தொடர் சோகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments