Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்காசி திருவிழாவில் தீ விபத்து...

Webdunia
புதன், 13 ஜூலை 2022 (13:51 IST)
தென்காசி அருகே அர்த்த நாரீஸ்வரர் கோவில் தெப்பத் தேரோட்டத்தின் போது, அலங்கார பந்தலிஉல் பட்டாசு வெடித்து தீ ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சிவகிரி தாலூகா வாசுதேவ நல்லூரில் உள்ள அர்த்த நாரீஸ்வரர் கோவிலில் நேற்று 10 ஆம் நாள் திருவிழாவின்போது, அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளிய தெப்பத் தேரோட்டம் நடைபெற இருந்தது.

இந்தத் தெப்பத் தேரோட்டத்தைக் காண சுமார் 2 ஆயிரம் பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். அப்போது,  இரவு 9:30 மணியளவில் கோவில் தென்புறத்தில் பட்டாசு வெடித்த போது, அதிலிருந்து பரவிய தீப்பொறி கோயில் முன்பு  போடப்பட்டிருந்த கூரைப்பந்தலில் விழுந்து அங்குள்ள அலங்காரப்பந்தல் முற்றிலும் எறிந்துபோனது.

இதைப் பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரால் அதை அணைத்தனர். தீயணைப்பு வீரர்களின் துரிய முயற்சியால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments