Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெல்லி தீ விபத்து: 7 பேர் உடல் கருகி பலி, 30 குடிசைகள் எரிந்தது!

டெல்லி தீ விபத்து: 7 பேர் உடல் கருகி பலி, 30 குடிசைகள் எரிந்தது!
, சனி, 12 மார்ச் 2022 (10:46 IST)
டெல்லி கோகுல்புரியில் குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 குடிசைகள் எரிந்து சாம்பலாகியுள்ளது. 

 
டெல்லி கோகுல்புரியில் உள்ள குடிசைப் பகுதியில் நள்ளிரவு 1 மணிக்கு திடீரென தீ பிடித்துள்ளது. த்கவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து அதிகாலை 4 மணிக்குள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் 30 குடிசைகள் எரிந்து சாம்பலாகின.  
 
இந்த துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது சமூக வலைத்தள பக்கத்தில், காலையிலேயே சோகமான செய்தியைக் கேட்டேன். நான் சம்பவ இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திப்பேன் என்று பதிவிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்வாதிகாரி போல மாறிய ஸ்டாலின் - ஜெயகுமார் அப்செட்!