எடப்பாடியார் எடுத்த எதிர்பாராத முடிவு! கோபியில் காலியாகும் செங்கோட்டையன் கூடாரம்?

Prasanth K
வெள்ளி, 7 நவம்பர் 2025 (10:12 IST)

அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டதை தொடர்ந்து முன்னாள் எம்.பி உள்பட 12 பேரை அதிமுகவிலிருந்து நீக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அதிமுகவை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என பேசி வந்த செங்கோட்டையனுக்கும், கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் பிணக்கு ஏற்பட்ட நிலையில், சமீபத்தில் செங்கோட்டையனை கட்சியை விட்டு நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

 

அதை தொடர்ந்து அடுத்த அதிரடி நடவடிக்கையில் இறங்கிய எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் ஆதரவாளர்களை கண்டறிந்து அவர்களையும் கட்சியில் இருந்து நீக்கியுள்ளார். செங்கோட்டையனுக்கு கோபிசெட்டிப்பாளையம், ஈரோடு பகுதிகளில் முக்கிய நிர்வாகிகளின் ஆதரவு உள்ளது.

 

இந்நிலையில் அதிமுக முன்னாள் எம்.பி சத்யபாமா, கோபி மேற்கு ஒன்றியம் குறிஞ்சிநாதன், ஈரோடு மேற்கு மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன் உள்ளிட்ட 12 பேரை கட்சியை விட்டு நீக்குவதாக அதிமுக தலைமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments