3வது குழந்தை பெற்று கொண்டால் அரசு சலுகை: திமுக எம்.எல்.ஏ கோரிக்கை..!

Siva
செவ்வாய், 29 ஏப்ரல் 2025 (13:12 IST)
மூன்றாவது குழந்தை பெற்றுக் கொண்டால் அரசு சலுகை வழங்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏ கோரிக்கை விடுத்த நிலையில், இந்த கோரிக்கை குறித்து திமுக அரசு பரிசீலனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், இதற்கு தமிழகம் உள்பட தென் மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
 
தொகுதி மறுசீரமைப்பு செய்தால், தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகள் குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது.
 
இந்த நிலையில், மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்ள முன்வரும் பெற்றோருக்கு அரசு சலுகை வழங்க வேண்டும் என பர்கூர் தொகுதி எம்எல்ஏ மதியழகன் இன்று சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்தார்.
 
இது சம்பந்தப்பட்ட கேள்விக்கு அமைச்சர் விரைவில் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுவையில் விஜய் - என்ஆர் காங்கிரஸ் கூட்டணியா? உள்துறை அமைச்சர் சந்தேகம்..!

தவெகவில் இணைகிறாரா வைத்திலிங்கம்? தமிழக அரசியலில் பரபரப்பு..!

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments