Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு கேஸ் குடுக்க வந்திருக்கேன்..! போலீஸ் ஸ்டேஷனில் நுழைந்த சிறுத்தை! - வைரலாகும் நீலகிரி சிசிடிவி வீடியோ!

Prasanth Karthick
செவ்வாய், 29 ஏப்ரல் 2025 (12:31 IST)

நீலகிரியில் காவல் நிலையத்திற்குள் சிறுத்தை ஒன்று சர்வ சாதாரணமாக நுழைந்து திரிந்த வீடியோ வைரலாகியுள்ளது.

 

மலைப்பகுதியான நீலகிரியில் ஏராளமான மலை கிராமங்கள் உள்ள நிலையில், காடுகளில் சிறுத்தை, காட்டு எருமைகள் என பல விலங்குகளும் வாழ்ந்து வருகின்றன. சில சமயங்களில் இந்த விலங்குகள் மனித குடியிருப்புக்குள் புகுந்து பொருள்சேதம், உயிர் சேதம் விளைவிப்பது நடந்து வருகிறது.

 

நீலகிரி மாவட்டம் நடுவட்டம் பகுதியில் காவல் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு நேற்று இரவு சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது. அங்கு யாராவது இருக்கிறார்களா என்று உள்ளே சென்று உலாவிய சிறுத்தை யாரும் இல்லாததால் திரும்ப வெளியே செல்கிறது. அதுவரை சிறுத்தை கண்ணில் படாமல் உள்ளே மறைந்திருந்த காவலர் மெதுவாக வெளியே வந்து எட்டி பார்த்துவிட்டு கதவை சாத்துகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை பெரும் சேதம்: ஆற்றில் உள்ள சிவன் சிலை மூழ்கும் அளவுக்கு வெள்ளப்பெருக்கு..!

மழையில் நனைந்து கொண்டு செல்போன் பேசலாமா? அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் வீட்டில் விசேஷம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

சீதை பிறந்த நகரின் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.887 கோடி. முதல்வர் நிதிஷ்குமார் ஒப்புதல்..!

வீடுதோறும் சென்று மக்களை சந்திக்கும் திட்டம்.. ஈபிஎஸ் வீட்டுக்கும் செல்வாரா முதல்வர்? அவரே கூறிய பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments