Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

Advertiesment
ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

Mahendran

, சனி, 22 மார்ச் 2025 (18:59 IST)
சென்னையில் இன்று, பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு குறித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கூட்டுப் பேரணிக் குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த சந்திப்பில் பஞ்சாப், கேரளா, தெலுங்கானா முதலமைச்சர்கள் உள்பட 24 அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
 
இந்நிலையில், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தைப் பற்றி இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்கள் உண்மையாகவே கவலைப்படுகிறீர்களா, அல்லது அரசியல் நோக்கத்திற்காக இதை முன்வைக்கிறீர்களா? என்ற கேள்வியை ஆர்எஸ்எஸ் இணை பொதுச் செயலாளர் அருண் குமார் எழுப்பியுள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது: "இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள், உண்மையிலேயே தங்கள் மாநிலத்தின் நலனுக்காகவே கலந்துகொண்டுள்ளார்களா, அல்லது அவர்களின் அரசியல் நோக்கத்திற்காகவா இதில் ஈடுபட்டுள்ளனர்? என்பதை அவர்கள் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அவர்கள் இதை யோசிக்கலாம். ஆனால், ஊடகங்கள் உண்மையில் தொகுதி மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்ப வேண்டும்.
 
மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கப்படாத நிலையில், தொகுதி மறுசீரமைப்பு ஆலோசனைகள் தொடங்கியதாகக் கூற முடியாது. இன்னும் சட்ட திட்ட வரைவு உருவாக்கப்படவில்லை. மத்திய அரசு இதற்கான நடைமுறையைத் தொடங்கும்போது, அது குறித்து விவாதிக்கலாம்.
 
தேவையில்லாத சந்தேகங்களை எழுப்புவதை தவிர்க்க வேண்டும். ஒருவரை ஒருவர் நம்பிக்கையுடன் இணைத்துச் செல்லுவதே ஜனநாயகத்தின் அடிப்படை. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் இதை சிந்திக்க வேண்டும்," என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!