Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்குச்சாவடிக்கு அருகே வாக்கு சேகரிப்பு: திமுக - அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம்...!

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2023 (11:08 IST)
வாக்குச்சாவடிக்கு அருகே வாக்கு சேகரிப்பு: திமுக - அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம்...!
ஈரோடு தொகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வாக்கு சாவடி அருகே திமுக மற்றும் அதிமுகவினர் வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்ததால் இரு தரப்பினர் மத்தியில் கடும் வாக்குவாதம் எழுந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஈரோடு இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது என்பதும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள பெரியார் நகர் என்ற பகுதியில் வாக்கு சாவடிக்கை அருகே வாக்கு சேகரிப்பதில் ஈடுபட்டதால் திமுக மற்றும் அதிமுக கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 
 
இது குறித்த தகவல் அறிந்ததும் காவல்துறையினர் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று இரு தரப்பினரை சமரசம் செய்து வைத்தனர். 
 
இந்த சம்பவம் காரணமாக அந்த வாக்குச்சாவடி அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து தற்போது மீண்டும் இயல்பு நிலைக்கு அந்த வாக்கு சாவடி திரும்பி உள்ளதாகவும் பொதுமக்கள் வாக்களித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கு இதுவே சாட்சி.. திமுக அரசை குற்றஞ்சாட்டும் அன்புமணி..!

போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments