Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளநோட்டு அடித்த விசிக பொருளாளர்.. தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு..!

Mahendran
திங்கள், 31 மார்ச் 2025 (12:59 IST)
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொருளாளராக இருக்கும் ஒருவர் கள்ள நோட்டு அடிப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது அவர் தலைமறைவாகியுள்ளதாகவும், அவரை போலீசார் தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொருளாளர் செல்வம், தனக்கு சொந்தமான இடத்தில் கொட்டகை அமைத்து, அதில் கள்ள நோட்டு அச்சடித்து வந்ததாக தெரிகிறது.
 
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று சோதனை செய்ய முயன்றபோது, போலீசார் வருவதை கண்ட செல்வம் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
 
இந்த நிலையில், போலீசார் நடத்திய சோதனையில் ஆயிரக்கணக்கான மதிப்புள்ள கள்ள நோட்டுகள், வாக்கி-டாக்கி  பிரின்டிங் மெஷின் உள்ளிட்ட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
 
செல்வம் மற்றும் அவரது கூட்டாளிகள் தலைமறைவாகியுள்ளதால், அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
 
இதேநிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து செல்வம் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது: அன்புமணி அதிர்ச்சி தகவல்..!

மத சண்டை வராமல் இருக்க பள்ளிகளில் பகவத் கீதை சொல்லித்தர வேண்டும்! - அண்ணாமலை!

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனிக்க.. நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்..!

ஆதரவாளர்களோடு சந்திப்பு.. அடுத்தடுத்து டெல்லி விசிட்! செங்கோட்டையன் திட்டம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments