Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி கைதிகளை காவல் நிலையத்தில் வைக்க கூடாது!? – டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு!

Webdunia
செவ்வாய், 3 மே 2022 (13:29 IST)
சமீபத்தில் விசாரணை கைதிகள் சிலர் காவல் நிலையத்தில் உயிரிழந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் டிஜிபி சைலேந்திரபாபு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு சாத்தான்குளத்தில் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்ட தந்தை – மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் சென்னை மற்றும் திருவண்ணாமலையில் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட இருவர் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணை கைதிகள் மரணம் குறித்த பெரும் விவாதங்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில் அனைத்து மாவட்ட காவல்நிலையங்களுக்கும் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ள தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு, இனி விசாரணை கைதிகளை இரவு நேரங்களில் விசாரிக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளார். மாலை 6 மணிக்கு மேல் அவர்களை காவல் நிலையத்தில் வைத்திருக்க கூடாது என்றும், 6 மணிக்குள் சிறைச்சாலையில் விட்டுவிட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

சமீப காலமாக விசாரணை கைதிகள் மரணம் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த உத்தரவால் இதுபோன்ற அசம்பாவிதங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்மில் பரிந்துரை செய்த ஊக்கமருந்து.. 3 நாட்கள் சிறுநீர் வெளியேறாமல் உயிரிழந்த வாலிபர்..!

7 நாட்களில் 23 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்.. 19 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

காற்றழுத்த தாழ்வுநிலை ஒரு பக்கம் இருக்கட்டும்.. இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும்..!

அரை மணி நேரத்தில் ஆதாரங்களை ஒப்படையுங்கள்.. சீமான் வழக்கில் நீதிபதி உத்தரவு..!

டாஸ்மாக் வழக்கு: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments