Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தங்கம் வாங்கியே ஆகணும்.. குவியும் மக்கள்! – நகைக்கடைகளில் ஏற்பாடுகள் தீவிரம்!

Advertiesment
தங்கம் வாங்கியே ஆகணும்.. குவியும் மக்கள்! – நகைக்கடைகளில் ஏற்பாடுகள் தீவிரம்!
, செவ்வாய், 3 மே 2022 (08:53 IST)
இன்று அட்ஷய திருதியை என்பதால் மக்கள் பலர் நகை வாங்க வருவார்கள் என்பதால் நகைக்கடைகளில் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று அட்ஷய திருதியை கொண்டாடப்படும் நிலையில் தங்கம் வாங்கினால் அது மேன்மேலும் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இன்று அட்ஷய திருதியையில் நகைவாங்க உகந்த நேரமாக காலை 5.49 முதல் மதியம் 12.13 வரை குறிக்கப்பட்டுள்ளது.

அதனால் இந்த குறிப்பிட்ட நேரத்தில் நகை வாங்க அதிக அளவிலான மக்கள் வருவார்கள் என்பதால் நகைக்கடைகள் பல விடியற்காலை நேரமே திறக்கப்பட்டு விட்டன. மேலும் நகை விற்பனையை அதிகரிக்க செய்கூலி, சேதாரம் இல்லை போன்ற அறிவிப்புகளையும் பல நகைக்கடைகள் அறிவித்து வருகின்றன.

பல கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கடந்த சில நாட்களாகவே பலர் வந்து நகைகளை முன்கூட்டியே தேர்வு செய்து வைத்துவிட்டு சென்றுள்ளார்களாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரேத பரிசோதனை கூடத்தில் திடீரென எழுந்த முதியவர்! – மருத்துவர்கள் அதிர்ச்சி!