Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓசி சோறு உண்ணும் ஐயா: கி.வீரமணியை கலாய்த்த தயாநிதி அழகிரி

Webdunia
செவ்வாய், 14 ஆகஸ்ட் 2018 (14:12 IST)
கடந்த பல ஆண்டுகளாக திமுக, அதிமுக என மாறி மாறி தனது ஆதரவை தெரிவித்து வந்த திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி, கடந்த சில ஆண்டுகளாக திமுகவுக்கு ஆதரவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் அழகிரி கூறிய ஆதங்க கருத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கீ.வீரமணி, 'வீட்டில் இருப்பவர்கள் குறித்து கேளுங்கள். வெளியில் இருந்து விருந்து உண்ண வந்தவர்கள் பற்றி கேட்க வேண்டாம்' என்று கூறினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி தனது டுவிட்டரில் “காலம் காலமாக தி.மு.க விலும், அ.தி.மு.க விலும், ஓசி சோறு உண்ணும் ஐயா கி.வீரமணி அவர்கள் இதை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கின்றேன்” என்று கலாய்த்துள்ளார்.

தயாநிதியின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர். மேலும் அழகிரி ஆதரவாளர்கள் வீரமணியை கடுமையாக தாக்கி கருத்து கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

பா.ஜ.கவின் பிளவுவாத கனவு ஒருபோதும் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு: தயாராகும் தேசிய பேரிடர் மீட்பு படை..!

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments