Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிஷோர் கே சாமியை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவு ரத்து!

கிஷோர் கே சாமியை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவு ரத்து!
, வியாழன், 23 டிசம்பர் 2021 (13:42 IST)
பிரபல அரசியல் விமர்சகரும் கிருஷ்ணசாமியை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அரசியல் விமர்சகரும் சமூக வலைதள பயனாளியுமான கிஷோர் கே ஸ்வாமி முன்னாள் முதல்வர் மு கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டியதை அடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர்
 
அதுமட்டுமின்றி கிஷோர் கே ஸ்வாமி மீது குண்டர் தடுப்புச் சட்டமும் பாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் தன்னை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தது செல்லாது என அறிவிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் கிஷோர் கே ஸ்வாமி மனு தாக்கல் செய்திருந்தார்
 
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் கிஷோர் கே ஸ்வாமி குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு ரத்து செய்யப்படுவதாக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மது அருந்துவதற்கான வயது குறைப்பு: அதிரடி அறிவிப்பு!