Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மம்மூட்டி நிலத்தை கழுவேலி நிலமாக அறிவித்தது செல்லாது… நீதிமன்றம் உத்தரவு!

மம்மூட்டி நிலத்தை கழுவேலி நிலமாக அறிவித்தது செல்லாது… நீதிமன்றம் உத்தரவு!
, புதன், 22 டிசம்பர் 2021 (09:59 IST)
நடிகர் மம்மூட்டிக்கு சொந்தமான நிலத்தை மழைநீர் வடியும் கழுவேலி நிலமாக அரசு அதிகாரிகள் அறிவித்ததை எதிர்த்து அவர் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி என்ற பகுதியில் நடிகர் மம்மூட்டிக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலம் இருந்துள்ளது. ஆனால் இதை மழைநீர் வடிகால் செல்லும் கழுவேலி புறம்போக்கு நிலம் என சொல்லி நில நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதை எதிர்த்து மம்மூட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அப்போது விசாரணையில் நீதிபதிகள் தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும் செப்டம்பர் 27 ஆம் தேதிக்குள் இது சம்மந்தமாக தமிழக அரசு பதிலளிக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில் கழுவேலி நிலமாக அறிவித்ததை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும் மம்மூட்டியின் விளக்கத்தை அளிக்க 12 வாரம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை ஸ்ரீதேவியை போல இருக்கும் பெண் ! வைரலாகும் வீடியோ