Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ்நாட்டில் இன்று 938 பேருக்கு கொரோனா உறுதி : 6 பேர் உயிரிழப்பு

Advertiesment
தமிழ்நாட்டில் இன்று  938 பேருக்கு கொரோனா உறுதி  : 6 பேர் உயிரிழப்பு
, சனி, 30 மே 2020 (18:31 IST)

தமிழ்நாட்டில் இன்று மேலும் 938 பேருக்கு கொரோனா உறுதி  செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21,184ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில்  நாளையுடன் 4வது கட்ட பொது  ஊரடங்கு முடிவடையும் நிலையில் சில  தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது. ஏற்கனெவே உள்ளதுறை அமைச்சர் அமித் ஷா மாநில முதல்வர்களுடன் கொரோனா நிலவரம் குறித்து கேட்டறிந்த நிலையில், இதுகுறித்து மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கு என தெரிகிறது.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை கூறியுள்ளதாவது : இன்று தமிழகத்தில் மேலும் 938 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,184 ஆக அதிகரித்துள்ளது. இன்று 6 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தம்  பலியானோர் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 618 பேருக்கு கொரோனா தொற்று  உறுதியாகியுள்ளது. சென்னையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 13,980 பேராக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் இன்று 687 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ள நிலையில், மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 12 ஆயிரமாக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விமானிக்கு கொரோனா… நடுவானில் தெரிந்த உண்மை – பயணிகள் தவிப்பு!