Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உச்சத்தை எட்டும் கொரோனா: திக்குமுக்காடும் தலைநகரம்!

உச்சத்தை எட்டும் கொரோனா: திக்குமுக்காடும் தலைநகரம்!
, சனி, 30 மே 2020 (11:48 IST)
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 2,446 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. 
 
நேற்று தமிழகத்தில் 874 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 20,246 ஆக உயர்ந்துள்ளது. 
 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்துள்ளது பெரும் அதிர்ச்சியான தகவல் ஆகும். மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 874 பேர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 618 பேர் என்பதால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,362 ஆக உயர்ந்துள்ளது. 
 
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 2,446 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் 1,678, திரு.வி.க.நகரில் 1,437, தேனாம்பேட்டையில் 1,500, தண்டையார்பேட்டையில் 1,425, அண்ணா நகரில் 1,143 ஆக பாதிப்பு எண்ணிக்கை உள்ளது.  
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த 2 வாரங்களுக்கு 13 நகரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு?