Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாயில் காயத்துடன் சுற்றிய யானை உயிரிழப்பு! – தொடரும் யானைகள் மரணம்!

Webdunia
வெள்ளி, 31 ஜூலை 2020 (12:20 IST)
கோயம்புத்தூரில் வாயில் காயத்துடன் சுற்றி வந்த ஆண் யானை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாக கோவை பகுதியில் யானைகள் அதிக அளவில் இறந்து வரும் சம்பவம் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் கேரளாவில் பெண் யானி ஒன்றிற்கு அன்னாசியில் வெடி வைத்து கொடுத்ததால் அது உயிரிழந்தது. அந்த சம்பவம் இந்திய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் வனவிலங்குகள் பாதுகாப்பு குறித்த குரல்கள் உயரத் தொடங்கின.

இந்நிலையில் தற்போது கோவையிலும் அதேபோல ஒரு சம்பவம் நடந்துள்ளது. கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் 11 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று வாயில் காயத்துடன் சுற்றி வந்துள்ளது. வாயில் காயம் இருந்ததாலும் எதையும் உண்ண முடியாமல் சிரமப்பட்ட அந்த யானை உயிரிழந்துள்ளது.

கடந்த ஆறு மாத காலத்தில் 16 யானைகள் கோவை பகுதியில் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளது. யானைகள் இறப்பை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என வன உயிர் ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments