Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் நமக்குத்தான் வெற்றி: முதலமைச்சர் ஸ்டாலின்

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (08:02 IST)
வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் நமக்குதான் வெற்றி என்ற வகையில் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
விருதுநகர் அருகே திமுக முப்பெரும் விழா நேற்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் 
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான அடித்தளமாக இந்த விழா அமையும் என்றும் நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 இடங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்றும் டெல்லியில் யாரை அமரவைத்து என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் பேசினார்
 
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் ஒப்பிட்டால் தமிழகம் தான் வளர்ச்சியில் முதல் மாநிலமாக உள்ளது என்றும் பட்டினிச்சாவு இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளது என்றும் இதுதான் திராவிட மாடல் ஆட்சி என்றும் அவர் தெரிவித்தார் 
 
மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி வரி உரிமையை பாதிக்கிறது என்றும் தமிழக ஆளுநர் மூலம் இரட்டை ஆட்சி அமைக்க பார்க்கிறார்கள் என்றும் அதை தடுப்பதற்கு நாம் 40க்கு 40 இல் வெற்றி பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். நாற்பதும் நமதே நாளை நமதே என்ற என்ற வாசகத்துடன் ஸ்டாலின் தனது உரையை முடித்துக்கொண்டார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments