Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஈபிஎஸ் தலைமை தொடர்ந்தால் அதிமுக அழிவை தடுக்க முடியாது: பண்ருட்டி ராமச்சந்திரன்!

Advertiesment
sasikala panruti
, வியாழன், 15 செப்டம்பர் 2022 (15:00 IST)
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் தலைமை தொடர்ந்தால் அக்கட்சியின் அழிவை யாராலும் தடுக்க முடியாது என அதிமுகவின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடைபெற்ற மூன்று தேர்தலிலும் எடப்பாடி பழனிச்சாமி கட்சி தோல்வியை சந்தித்துள்ளது என்றும் எடப்பாடி பழனிச்சாமி வைத்து அதிமுகவை காப்பாற்ற முடியாது என்றும் அவரிடம் தாய்மை உள்ளம் இல்லை என்றும் தெரிவித்தார்
 
எடப்பாடி பழனிசாமி தலைமை தொடர்ந்தால் அதிமுக அழிவைத் தடுக்க முடியாது என்றும் அதிமுகவை காப்பாற்ற யார் முன்வந்தாலும் என் ஆதரவு தருவேன் என்றும் தெரிவித்தார் 
 
டிடிவி தினகரன் அதிமுகவுடன் இணக்கமாக செயல்பட விரும்புகிறார் என்றும் சசிகலா சட்டரீதியில் அதிமுகவை மீட்கப் போராடுகிறார் என்றும் ஓபிஎஸ் மற்றும் சசிகலாவின் நோக்கம் ஒன்றாக உள்ளது என்பதால் அதற்கு அவர்கள் போராடுகிறார் என்று ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசுப் பள்ளியில் ஆபாச பாடம்? ஆசிரியர் கைது! – குமரியில் அதிர்ச்சி!