Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியாக இருந்த பெண்ணின் கண்ணில் மிளாகாய் பொடி தூவி கை கால்களை கட்டி தலையில் பலமாக தாக்கி 3 பவுன் தாலி செயின் பறிப்பு!!

J.Durai
செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (14:03 IST)
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தையடுத்த காரணம்பேட்டை அருள்ஜோதி நகரை சேர்ந்தவர் பால்பாண்டி இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
 
இந்நிலையில் இவரது மனைவி சரண்யா வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் சிலர் அவரின் கண்ணில் மிளகாய்ப்பொடி தூவி கை கால்களை கட்டி தலையில் பலமாக தாக்கி கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் தாலி சங்கிலி பறித்துக் கொண்டு தப்பி ஓடிதாக கூறப்படுகிறது.
 
இதனையடுத்து இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேரை சில மணி நேரத்திலே பிடித்ததாக கூறப்படுகிறது.
 
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பல்லடம் போலீசார் இச்சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
பல்லடம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கண்களில் மிளகாய் பொடி தூவி கை கால்களை கட்டி தலையில் பலமாக தாக்கி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தாலி செயின் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாக்லேட் தருவதாக சொல்லி 6 வயது சிறுமிக்கு வன்கொடுமை! பேக்கரி ஓனர் கைது!

உலகப் பிரபலமான திருவாரூர் தேர் திருவிழா இன்று! - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

பிரதமரை அவமானப்படுத்திய முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

37 ஆண்டுகள் கழித்து இன்று கருப்பு திங்கள்? ரத்தக்களறி ஆகுமா பங்குச்சந்தை?

உதகையில் இ-பாஸ் கட்டுப்பாடு: கடும் போக்குவரத்து சிக்கலால் சுற்றுலா பயணிகள் அவதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments