Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண்ணை கன்னத்தில் அறைந்த தீட்சிதர் – தலைமறைவு

Webdunia
ஞாயிறு, 17 நவம்பர் 2019 (14:02 IST)
சிதம்பரம் நடராஜர் கோயிலில் அர்ச்சனை செய்வது தொடர்பாக பெண்ணுடன் ஏற்பட்ட தகராறால் அவரை அறைந்த தீட்சிதர் தலைமறைவாகியுள்ளார்.

சிதம்பரம் வ.உ.சி தெருவைச் சேர்ந்த லதா. அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரியும் இவர் சிதம்பரம் கோவிலுக்கு தனது மகனின் பிறந்தநாளுக்கு வழிபாடு செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த தீட்சிதரிடம் தேங்காய், பழம் ஆகியவற்றைக் கொடுத்துள்ளார்.  லதா தன் மகனின் பெயர் மற்றும் ராசி நட்சத்திரம் ஆகியவற்றை சொல்வதற்கு முன்பாகவே அர்ச்சகர் தேங்காயை உடைத்து வழிபாடு செய்ய ஆரம்பித்துள்ளார்.

இதனால் லதா அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து யாரும் எதிர்பாராத விதமாக அந்த பெண்ணைக் கன்னத்தில் அறைந்துள்ளார். இது சம்மந்தமாக கேட்டதற்கு அந்த பெண் தன்னுடைய செயினை பறிக்க வந்ததாகவும் அதனால்தான் அறைந்ததாகவும் பொய் சொல்லியுள்ளார். இதையடுத்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளிக்க தீட்சிதர் மேல் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த தீட்சிதர் தலைமறைவாக அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments