Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கம்பெனி தரக்கூடிய அதிசய பொருள்… துணி சோப்பு! – அதிர்ச்சியில் உறைந்த இளைஞர்!

Webdunia
செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (16:02 IST)
ஆன்லைன் விற்பனை தளம் ஒன்றில் செல்போன் ஆர்டர் செய்த இளைஞருக்கு சோப்பு அனுப்பப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக மக்கள் வெளியே செல்லவே தயக்கம் காட்டி வரும் நிலையில் ஆன்லைன் தளங்களில் பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆன்லைன் மூலமாக சில போலி நிறுவனங்களும் பொருட்கள் விற்பது போல ஏமாற்றும் மோசடி சம்பவங்களும் நடந்து வருகின்றன.

சமீபத்தில் சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் நவீன மாடல் மொபைல் ஒன்றை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு வந்த பார்சலை ஆசையாக பிரித்து பார்த்தபோது அதில் சலவை சோப்பு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஆன்லைன் தளத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளித்து பணம் திரும்ப கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் சிலர் கூறும்போது பொருட்களுக்கு ஆன்லைனில் ஸ்டார் ரேட்டிங் இருப்பது போல பொருட்களை விற்கும் முகவர்களுக்கும் ஸ்டார் ரேட்டிங் இருக்கும். அதை சோதித்து பொருட்களை வாங்கினால் இவ்வாறான மோசடிகளில் சிக்காமல் தவிர்க்கலாம் என்று கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெகுல் சோக்ஸியை இந்தியாவுக்கு அழைத்து வருவது அவ்வளவு எளிதல்ல: பிரபல தொழிலதிபர் கருத்து..!

தொடையில் டேப் அணிந்து 240 மதுபாட்டில்கள் கடத்தல்: 2 பெண்கள் கைது..

வக்ஃப் சட்டத்தால் மாஃபியாக்களின் கொள்ளை நிறுத்தப்படும்: பிரதமர் மோடி

பாஜக கூட்டணியால் அதிருப்தி.. கட்சியில் இருந்து விலகுகிறாரா ஜெயகுமார்: அவரே அளித்த விளக்கம்..!

5 வயது சிறுமியை கொலை செய்தவன் என்கவுண்டரில் சுட்டு கொலை.. பொதுமக்கள் கொண்டாட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments