கண்டெய்னரோடு செல்போன்கள் கொள்ளை! – ஹாலிவுட் பட லெவலில் தொடரும் கொள்ளை சம்பவங்கள்!

Webdunia
புதன், 21 அக்டோபர் 2020 (13:04 IST)
சென்னையில் இருந்து செல்போன்கள் ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த பூந்தமல்லியிலிருந்து செல்போன்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று மும்பை நோக்கி புறப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் ஓசூர் அருகே லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுனர் மற்றும் உதவியாளர் உபாதை கழித்த நேரத்தில் அவர்களை சுற்றி வளைத்த கும்பல் அவர்களை தாக்கி விட்டு கண்டெய்னர் லாரியை திருடி சென்றுள்ளனர். பிறகு அதிலிருந்த செல்போன்களை வேறு கண்டெய்னர் லாரிகளுக்கு மாற்றி எடுத்துக் கொண்டு தப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த ஓட்டுனர் மற்றும் உதவியாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் போலீஸார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். கொள்ளையடிக்கப்பட்ட செல்போன்கள் மொத்தமாக ரூ.15 கோடி மதிப்புடையது.

முன்னதாக இதே போன்று செல்போன் கண்டெய்னர் ஆந்திர மாநிலத்தில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடந்த நிலையில் தற்போது சென்னையிலும் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுதந்திர இந்தியாவில் முதல் வாக்கு திருட்டில் ஈடுபட்டவர் நேருதான்.. அமித்ஷா

பொறியியல் கல்லூரி மாணவரை கிரிக்கெட் பேட்டால் அடித்து கொலை செய்த காதலியின் குடும்பம்.. போலீஸ் விசாரணை..!

காஞ்சிபுரம் டி.எஸ்.பி.யை சிறையிலடைக்க உத்தரவிட்ட நீதிபதி சஸ்பெண்ட்! பரபரப்பு தகவல்..!

நயினார் நாகேந்திரன் - எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை! அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பா?

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டால் சமையலறை கருவிகளுடன் தயாராக இருங்கள்: மம்தா பானர்ஜி ஆவேசம்

அடுத்த கட்டுரையில்
Show comments