முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார் என்பது தெரிந்ததே. கடந்த 2017 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் இது குறித்த தீர்ப்பு வெளி வந்ததால் அவர் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது குறிப்பிடதக்கது
ஆனால் நன்னடத்தை உள்ளிட்ட ஒருசில காரணங்களால் சசிகலா தண்டனை காலம் முடிவதற்கு முன்னரே ரிலீஸ் ஆகி விடுவார் என்று ஒரு சில கருத்துக்கள் வெளியாகியது. இதனை உறுதி செய்வது போல் பாஜக பிரபலம் ஆசீர்வாதம் ஆச்சாரி என்பவர் தனது டுவிட்டரில் ஆகஸ்ட் 14ஆம் தேதி சசிகலா விடுதலையாக வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த தகவல்களை எதிர்பாருங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
இந்த டுவிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவது குறித்து எந்த பரிசீலனையும் இதுவரை இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஒருவேளை ஆசிர்வாதம் ஆச்சாரி கூறுவதுபோல் சசிகலா ஆகஸ்ட் மாதம் விடுதலை செய்யப்பட்டால் தமிழக அரசியலில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
சசிகலாவால் முதல்வர் ஆக்கப்பட்டவர் தான் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் தற்போது சசிகலாவை அவர் எதிர்க்கும் மன நிலையில் இருப்பதால் சசிகலா விடுதலை ஆகி வந்த உடன் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!
மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!
மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!
பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!
திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!