Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜகா வாங்கிய ரஜினியால் பல்டி அடித்த அர்ஜூன் சம்பத்!

Webdunia
செவ்வாய், 5 ஜனவரி 2021 (12:47 IST)
வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் இந்து மக்கள் கட்சி தனித்து போட்டியிடுகிறது என அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். 
 
இதற்கு முன்னர் ரஜினி கட்சி துவங்குவதாக அறிவித்த போது அர்ஜூன் சம்பத், 234 தொகுதிகளிலும் ரஜினி கைகாட்டும் வேட்பாளர் வெற்றி பெற இந்த ஆன்மிக அரசியல் மாநாடு நடத்தப்படுகிறது. திராவிட அரசியலுக்கு மாற்றாக ஆன்மிக அரசியல் வெல்ல வேண்டும். தமிழகத்தில் திராவிட அரசியலுக்கும், ஆன்மிக அரசியலுக்குமான போட்டியில் ஆன்மிக அரசியல்தான் வெல்லும். 
 
பாஜக தமிழகத்தில் தனித்து போட்டியிட்டாலும் மத்தியில் மோடி, மாநிலத்தில் ரஜினி என்பதே இந்து மக்கள் கட்சியின் திட்டம். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் 234 தொகுதிகளிலும் ரஜினியின் கரத்தை வலுப்படுத்துவோம் என தெரிவித்தார். 
 
ஆனால் இப்போது ரஜினி அரசியல் கட்சி துவங்கப்போவது இல்லை என அறிவித்ததால் வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் இந்து மக்கள் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இது தொடர்பாக மதுரையில் நடக்கும் மாநில செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படுகிறது என சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

அடுத்த கட்டுரையில்
Show comments