அதிமுக எம்பியின் ராஜினாமா கடிதம் ஏற்க மறுப்பு!

Webdunia
திங்கள், 2 ஏப்ரல் 2018 (12:38 IST)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்த அதிமுக எம்.பி. முத்துகருப்பனின் ராஜினாமா கடிதம் ஏற்க மறுக்கப்பட்டுள்ளது.

 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக எம்.பி.க்கள் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கடந்த வாரம் எம்.பி. நவநீதகிருஷ்ணன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் அதிமுக எம்.பி.க்கள் தீக்குளிப்போம் என்று கூறினார். அதிமுக எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் எதிர்க்கட்சி உள்ளிட்ட பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
இந்நிலையில் அதிமுக எம்.பி. முத்துகருப்பன் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்து ராஜினாமா கடிதம் கொடுக்க முடிவு செய்தார். ஆனால் அவரது கடிதத்தை வெங்கையா நாயுடு ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார்.   
 
இதுபோன்ற கடிதத்தை ஏற்க முடியாது என்றும் ராஜினாமா செய்ய வேண்டாம் என்றும் வெங்கையா நாயுடு அறிவுரை வழங்கியுள்ளார். 
 
மேலும் உடல்நலம் சரியில்லை மற்றும் சொந்த காரணம் உள்ளிட்ட காரணங்களை குறிப்பிட்ட ராஜினாமா கடிதத்தை ஏற்கும் வாய்ப்புள்ளது. ஆனால், அரசியல் காரணங்களை குறிப்பிட்டு அளிக்கப்படும் ராஜினாமா கடிதம் பொதுவாக ராஜ்யசபாவில் ஏற்கப்படுவதில்லை. இதனால் முத்துகருப்பனின் ராஜினாமா கடிதத்தை ஏற்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

100% சொத்து வரி உயர்வு.. ஆர்ப்பாட்டம் தேதியை அறிவித்த அதிமுக..!

அடுத்த கட்டுரையில்
Show comments