Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல செய்தி தொகுப்பாளினி 5 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை

Webdunia
திங்கள், 2 ஏப்ரல் 2018 (12:17 IST)
ஐதராபாத்தில் பிரபல செய்தி தொகுப்பாளினி 5 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு சேனல் ஒன்றில் செய்தி தொகுப்பாளினியாக பணியாற்றியவர் ராதிகா. இவர் தனது கணவரை ஆறு மாதத்திற்கு முன்பு விவாகரத்து செய்தார். இவருக்கு மனநலம் பாதித்த ஒரு மகன் உள்ளார்.
 
இந்நிலையில் பணியில் இருந்து வீடு திரும்பிய ராதிகா, வீட்டில் தனது ஹேண்ட் பேக்கை வைத்து விட்டு, வேகமாக 5 வது மாடிக்கு சென்று மேலிருந்து குதித்துள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், ராதிகாவை மீட்டு மருத்துவமனையில் மீட்டனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து ராதிகாவின் வீட்டிற்கு சென்ற போலீஸார், ராதிகாவின் ஹேண்பேக்கிலிருந்த கடிதத்தை கைப்பற்றினர். அதில் மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொள்கிறேன், வேறு யாரும் காரணமில்லை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ராதிகாவின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments