Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல செய்தி தொகுப்பாளினி 5 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை

Webdunia
திங்கள், 2 ஏப்ரல் 2018 (12:17 IST)
ஐதராபாத்தில் பிரபல செய்தி தொகுப்பாளினி 5 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு சேனல் ஒன்றில் செய்தி தொகுப்பாளினியாக பணியாற்றியவர் ராதிகா. இவர் தனது கணவரை ஆறு மாதத்திற்கு முன்பு விவாகரத்து செய்தார். இவருக்கு மனநலம் பாதித்த ஒரு மகன் உள்ளார்.
 
இந்நிலையில் பணியில் இருந்து வீடு திரும்பிய ராதிகா, வீட்டில் தனது ஹேண்ட் பேக்கை வைத்து விட்டு, வேகமாக 5 வது மாடிக்கு சென்று மேலிருந்து குதித்துள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், ராதிகாவை மீட்டு மருத்துவமனையில் மீட்டனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து ராதிகாவின் வீட்டிற்கு சென்ற போலீஸார், ராதிகாவின் ஹேண்பேக்கிலிருந்த கடிதத்தை கைப்பற்றினர். அதில் மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொள்கிறேன், வேறு யாரும் காரணமில்லை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ராதிகாவின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments