Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்படியுமா 'ஒரு தலைவர் 'பேசுவார்..?ஸ்டாலினைக் கிண்டலடித்த ஜெயக்குமார்...

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2019 (14:06 IST)
அதிமுக கூட்டணியில் பாஜக - பாமக ஆகியக் கட்சிகள் இணைவது வெறும் யூகங்களாகவே இருந்தது. ஆனால் நேற்று காலையியில்  அதிமுகவுடன் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது பாமக. அந்தக் கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் 7 தொகுதிகளை ஒதுக்கியுள்ளதாகவும் மாநிலங்களவைத் தேர்தலில் 1 தொகுதியும் ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்தது. அதையடுத்து சில மணி நேரங்களில் பாஜக வுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையை முடித்து 5 தொகுதிகளைக் கொடுத்து டீலை முடித்தது.
இந்நிலையில் இந்தக் கூட்டணி  குறித்து ஸ்டாலின் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.நேற்று வேலூர் அருகே ஆம்பூரில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில்  ஸ்டாலின் பேசியதாவது:
 
பணத்துக்காக இணைந்துள்ள கூட்டணிதான் அதிமுக - பாமக இடையேயான கூட்டணி ஆகும்.மக்களின் நலனுக்காக இல்லாமல் பணத்துக்காக சேர்ந்துள்ள கூட்டணி அது.ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வத்தை விமர்சித்தவர் ராமதாஸ். அதிமுகவின் கதை என்ற பெயரில் அரசை விமர்சித்து அண்மையில்தான் புத்தகம் வெளியிட்டவர் அதே கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார். 
7 மக்களவைத் தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் மட்டுமின்றி வேறு எதோகூட இதன் பின்னணியில்  உள்ளது. தமிழக மக்களைப் பற்றி கவலைப்படாமல் பணத்துக்காக அதிமுகவுடன் கூட்டணி  அமைத்துள்ளதாக  அதிமுகவுடான பாமகவின் கூட்டணி பற்றி ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் தெரிவித்தார்.
 
ஸ்டாலினின் விமர்சனத்துக்கு பதிலளித்து  அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளதாவது:
 
பாமக தலைவர் ராமதாஸ் குறித்து முக.ஸ்டாலின் பேசியவை எல்லாம் ஒரு அரசியல் கட்சித் தலைவர் பேசக்கூடியதாக இல்லை. மேலும் சந்தர்ப்பவாதத்தை பற்றியும், கூட்டணி மாறுவது குறித்தும் பேசுவதற்கு திமுகவிற்கு தகுதி இல்லை. தற்போது அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைந்துள்ள விரக்தியில்தான் ஸ்டாலின் இவ்விதம் பேசி வருகிறார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உக்ரைன் ரஷ்யாவை தாக்கிய ஏவுகணைகளை வாங்க விரும்பும் பாகிஸ்தான்.. ஆனால் அதில் தான் ஒரு சிக்கல்..!

அரசு மருத்துவமனைகளில் இனி கட்டணம் உண்டு.. அமைச்சரின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி..!

2 திருமணமும் தோல்வி.. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்.. இளம்பெண்ணை கொலை செய்த அப்பா - மகன்..!

என் பிணத்தை நானே என் கண்ணால் பார்த்தேன்.. 8 நிமிடங்கள் இறந்து பின் உயிர் பிழைத்த பெண் பேட்டி..!

கணவன், குழந்தைகள், மாமனார், மாமியார்.. குடும்பத்தையே விஷம் கொடுத்து கொல்ல முயன்ற பெண்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments