Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆரம்ப கால படங்களில் இசையமைக்க திணறினேன் - இளையராஜா ' ஓபன் டாக்'

ஆரம்ப கால படங்களில் இசையமைக்க திணறினேன் - இளையராஜா ' ஓபன் டாக்'
, திங்கள், 18 பிப்ரவரி 2019 (15:58 IST)
இந்திய சினிமா இசையில் தவிர்க்க முடியாத ஒரு பெயராக உச்சரிக்கப்படுவது இளையராஜா... சுமார் நாற்பதாண்டுகளுக்கு மேலாக இசையில் கொடிகட்டி பறந்து வருகிறார். சமீபத்தில் அவரது 75 வது பிறந்தநாளுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்திய விழாவில் இசைஞானியை கவுரவித்தனர்.



இந்நிலையில் இளையராஜா 75 என்ற நிகழ்ச்சி  ஒரு தனியார் சேனலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி,. பார்த்திபன், பாண்டியராஜன், சந்தான பாரதி, எஸ்,பி முத்துராமன், ஆர்.சுந்தரராஜன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டு இளையராஜாவிடம் உரையாடல் நிகழ்த்தினர்.இதை நடிகை ரோகிணி தொகுத்து வழங்கினார்.
 
அதில் ஆயிரம் படங்களுக்கான இசையை எப்படி ரிப்பிட்டேஷன் செய்யாமல் இசைமைத்தீர்கள் என்று எஸ்.பி முத்துராமன்  கேட்டதற்கு... இளையராஜா கூறியதாவது: நான் எப்படி இசையமைக்க வேண்டும் என்பதை இசை தான் தீர்மானிப்பதாக கூறினார்.

மேலும் ,முதல் 12 படங்களுக்கு நான் பீஜிஎம் இசையமைக்க திணறினேன், நான் கற்பனை செய்து வைத்திருந்த இசையை சினிமாவில் செயல்படுத்த முடியுமா என சிறிது அஞ்சினேன். பிறகு அமைந்த படங்களில் என் இசையை நான் கற்பனை செய்து வைத்திருந்தது போல கொடுக்க முடிந்தது. இவ்வாறு தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உயிரிழந்த அரியலூர் சிவச்சந்திரனின் குடும்பத்துக்கு நடிகர் ரோபோ சங்கர் ஆறுதல் கூறி ரூ. 1லட்சம் நிதியுதவி