Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீலகிரி கனமழை சேதம் – முகாம்களில் 5000 பேர் !

Webdunia
செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (15:15 IST)
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் 5000 க்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு, பாலங்கள் மற்றும் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதுவரை கனமழைக்கு 7 பேர் பலியாகியுள்ளனர். தேசியப் பேரிடர் மீட்பு படை, ராணுவம், தீயணைப்புத் துறை, காவல் துறை, வனத் துறை என மீட்புப் பணிக்குழுக்கள் தீவிரமாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்னும் இந்தப் பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சொல்லப்படுவதால் மீட்புப் பணிகளில் இன்னும் சுணக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மழையால் இதுவரை 1200 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. அதில் இருந்த 5000 க்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments