Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை: எங்கெங்கு தெரியுமா?

Advertiesment
தமிழகம்
, சனி, 20 நவம்பர் 2021 (13:48 IST)
உள் கர்நாடகா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மழைக்கு வாய்ப்பு. 

 
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு காற்றழுத்த மண்டலமாக மாறி இன்று கரையை கடந்தது என்பதை பார்த்தோம். இதன் காரணமாக தமிழகம் மற்றும் ஆந்திராவில் கனமழை பெய்து வருகிறது.
 
இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு வலுவிழந்தாலும் இன்னும் ஐந்து நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நவம்பர் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் தென்மாவட்டங்கள் உள் மாவட்டங்கள் ஆகிய இடங்களில் நல்ல மழை பெய்யும் என்றும் புதுவை காரைக்கால் பகுதியில் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனிடையே உள் கர்நாடகா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒகேனக்கல் வெள்ளம்: 6வது நாளாக பரிசலுக்குத் தடை