Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை குடியரசு துணைத் தலைவர் தேர்தல்

Webdunia
வியாழன், 9 ஆகஸ்ட் 2007 (16:27 IST)
குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, இடது சாரிகள் சார்பில் முகமது ஹமீத் அன்சாரியும், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நஜ்மா ஹெப்துல்லாவும், 3வது அணியான ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி சார்பில் ரசீத் மசூத்தும் போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தலில் மக்களவை, மாநிலங்களை உறுப்பினர்கள் மொத்தம் 788 பேர் வாக்களிக்கின்றனர். இதில், மாயாவதியின் பகுஜன் சமாஜ் வாதி கட்சியையும் சேர்த்து மொத்தம் 425 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு காங்கிரஸ், இடது சாரிகள் கூட்டணி வேட்பாளர் ஹமீத் அன்சாரிக்கு இருப்பதால் அவரது வெற்றி ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

பாராளுமன்றத்தில் உள்ள தனி அறையில் நடைபெறும் இந்த தேர்தலுக்கான வாக்குபதிவு, நாளை காலை 10 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

Show comments