ஜூலை இறுதிக்குள் ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம்! – உச்சநீதிமன்றம் உத்தரவு!

Webdunia
செவ்வாய், 29 ஜூன் 2021 (13:58 IST)
மத்திய அரசின் ஒரே நாடு ஒடே ரேசன் கடை திட்டத்தை ஜூலை இறுதிக்குள் அமல்படுத்த உச்சநீதிமன்றம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் புலம்பெயர் தொழிலாளர்களும் அவர்கள் பணிபுரியும் மாநிலங்களிலேயே உணவு பொருட்களை பெறும் வகையில் ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தை மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வந்தது. எனினும் சில மாநிலங்களில் இன்னமும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து தற்போது உத்தரவு பிறப்பித்துள்ள உச்சநீதிமன்றம் ஜூலை மாத இறுதிக்குள் அனைத்து மாநிலங்களும் ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என கூறியுள்ளது. ரேஷன் பொருட்க வழங்குவது குறித்து மாநில அரசுகள் திட்டம் வகுத்துக் கொள்ள வேண்டும் என்றும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான தானியங்களை மத்திய அரசு வழங்கி அவர்களுக்கான உணவு வழங்கலை உறுதி படுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிதாக மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்? அமைச்சர் முக்கிய அறிவிப்பு..!

சென்னையில் இருந்து கிளம்பும் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து.. பல மடங்கு உயர்ந்த விமான கட்டணங்கள்..!

பாமக தலைவராக அன்புமணி தொடர முடியாது.. டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

அடுத்த கட்டுரையில்
Show comments