Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிக்கலில் ஜி.பி.முத்து, ரவுடி பேபி சூர்யா உள்ளிட்ட யூட்யூப் பிரபலங்கள்! – முதல்வரிடம் மனு!

Webdunia
செவ்வாய், 29 ஜூன் 2021 (13:35 IST)
சமீபத்தில் யூட்யூபில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் பப்ஜி மதன் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் சில யூட்யூப் பிரபலங்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில காலமாக யூட்யூப் உள்ளிட்ட தளங்களில் ஆபாசமாக மற்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசும் நபர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் பப்ஜி மதன், கிஷோர் கே சுவாமி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் மேலும் சில யூட்யூப் பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மக்கள் அதிகார இயக்கம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை கடிதத்தை அனுப்பியுள்ளனர். அதில் யூட்யூப் வீடியோக்களில் ஆபாசமாக பேசி வரும் ஜி.பி.முத்து, ரவுடி பேபி சூர்யா, டிக்டாக் திவ்யா உள்ளிட்ட 8 பேரின் யூட்யூப் பக்கங்கள் முடக்கப்பட வேண்டும் என்றும், மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் ஈடுபடும்போது இந்த வீடியோக்களை மாணவர்கள் பார்க்க நேரிடலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 சுவருக்கு பெயிண்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்.. ரூ.1 லட்சம் செலவு.. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் போலி பில்கள்..!

2 வருடமாக தன்னை போலீஸ் என கூறிய போலி அதிகாரி.. பிடிபட்டது எப்படி?

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments