Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவியை கத்தியால் குத்தி தன்னையும் குத்தி கொண்ட மாணவன்: ஒருதலை காதலால் விபரீதம்!

Webdunia
திங்கள், 2 ஜனவரி 2023 (17:33 IST)
ஒருதலைக் காதலால் கல்லூரி மாணவர் ஒருவர் மாணவியை கத்தியால் குத்திவிட்டு தன்னைத் தானே குத்திக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பவன் கல்யாண் என்ற 23 வயது கல்லூரி மாணவர் அதே பகுதியை சேர்ந்த 19 வயது மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது 
 
ஆனால் மாணவி அவருடைய காதலை ஏற்கவில்லை என்றும் நட்பாகத்தான் பழகுகிறேன் என்று கூறியுள்ளார். இதனையடுத்து இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் திடீரென பவன்கல்யாண் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியை சரமாரியாக குத்தியுள்ளார்
 
இதனை அடுத்து ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் சரிந்த மாணவியை பார்த்து பவன் கல்யாண் அதிர்ச்சி அடைந்தார். இந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவி இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து போலீஸ் விசாரணைக்கு பயந்து மாணவர் பவன் கல்யாண் தன்னைத் தானே கத்தியால் குத்திக் கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கல்லூரி வளாகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments