Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பூக்களுக்கு நடுவே பேரழகியாய் ரகுல் ப்ரீத் சிங் – லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

பூக்களுக்கு நடுவே பேரழகியாய் ரகுல் ப்ரீத் சிங் – லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
, வியாழன், 29 டிசம்பர் 2022 (16:20 IST)
2009 ஆம் ஆண்டு கன்னட சினிமா மூலமாக அறிமுகமானவர் ரகுல் ப்ரித் சிங். நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் இப்போது தமிழ், தெலுங்கு  சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங்.

தமிழில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி மட்டும் தான் இவருக்கு கைகொடுத்தது. அதையடுத்து வெளிவந்த தேவ், என்.ஜி.கே  என தொடர் தோல்வி அடைந்ததால். கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் டோலிவுட்டிற்கு பறந்துவிட்டார். இப்போது சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் இந்தியன் 2 படங்கள் மட்டுமே கைவசம் உள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டு அவரின் பிறந்தநாளின் போது தயாரிப்பாளரான ஜாக்கி பனானி ரகுல் பிரித் சிங்குக்கும் தனக்கும் இடையே உள்ள காதலை ஒரு புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்தார். அந்த புகைப்படத்தை பகிர்ந்த் ரகுல் ‘தன் வாழ்வில் வண்ணம் சேர்த்ததுக்கு நன்றி ‘ எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இப்போது ரகுல் ப்ரீத் சிங் மணவறை போன்ற ஒரு இடத்தில் பூக்களுக்கு இடையே இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்… இன்ஸ்டாகிராம் வைரல்!