Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொடர்ந்து 2வது நாளாக பங்குச்சந்தை உயர்வு: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

sensex
, செவ்வாய், 5 ஜூலை 2022 (09:42 IST)
நேற்று பங்குசந்தையின் சென்செக்ஸ் புள்ளிகள் சுமார் 300க்கும் மேல் அதிகரித்த நிலையில் இன்றும் ஆரம்பத்திலேயே 200 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில நாட்களாக பங்குச் சந்தையின் சென்செக்ஸ் கடும் வீழ்ச்சி அடைந்து வருகிறது என்பதையும் அதனால் முதலீட்டாளர்கள் கோடிக்கணக்கான பணத்தை நஷ்டம் அடைந்து உள்ளார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம் 
 
ஆனால் இந்த வாரத்தின் முதல் நாளான நேற்று 300க்கும் மேற்பட்ட சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்தது. அதேபோல் இன்று வர்த்தகம் தொடங்கிய ஒரு சில நிமிடங்களில் 227 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்து உள்ளது என்பதும் 53 ஆயிரத்து 461 என்ற புள்ளியில் தற்போது வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 72 புள்ளிகள் உயர்ந்து 15 ஆயிரத்து 907 என்ற புள்ளியில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தை தொடர்ந்து இரண்டாவது நாளாக உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகம் வரும் அகதிகள் எண்ணிக்கை 100ஐ தாண்டியது! – தொடரும் நெருக்கடி!