Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த காலத்துல அப்படி இருந்த ஏர்லைன்ஸ்.. திரும்ப மாத்துவோம்! – ரத்தன் டாடா மகிழ்ச்சி ட்வீட்!

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (17:07 IST)
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா மீண்டும் டாடா வசம் சென்றுள்ள நிலையில் ரத்தன் டாடா மகிழ்ச்சியை ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான சேவைகளை வழங்கி வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளில் அதன் கடன் தொகை ரூ.70 ஆயிரம் கோடியாக உயர்ந்தது. இதனால் நஷ்டத்தில் இருந்து வரும் ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்தது.

இந்த ஏலத்தில் பல நிறுவனங்கள் கலந்து கொண்ட நிலையில் இறுதியாக ரூ.18 ஆயிரம் கோடிக்கு ஏர் இந்தியாவை டாடா நிறுவனம் வாங்கியுள்ளது. கடந்த 68 ஆண்டுகளுக்கு முன்னர் டாடாவிடம் இருந்த ஏர்லைன்ஸைதான் மத்திய அரசு அரசுடமையாக்கி ஏர் இந்தியா நிறுவனமாக மாற்றியது. இந்நிலையில் மீண்டும் ஏர் இந்தியா டாடா குழுமம் வசமே சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இதுகுறித்து வெல்கம் பேக் ஏர் இந்தியா என பதிவிட்டுள்ள ரத்தன் டாடா “ஏவியேஷன் துறையில் டாடா தனது தடத்தை பதிக்க ஏர் இந்தியா ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். முன்னதாக ஜே.ஆர்.டி டாடா காலத்தில் உலகத்தின் பிரபலமான விமான சேவையாக இது இருந்தது. மீண்டும் அந்த நிலைக்கு உயர்த்த பாடுபடுவோம். ஜே.ஆர்.டி டாடா இன்று இருந்திருந்தால் மிக்க மகிழ்ந்திருப்பார். இந்த நிறுவனத்தை எங்களுக்கு அளித்த அரசுக்கு நன்றி” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெடித்து சிதறிய ரஷ்ய செயற்கைக்கோள்! விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்! – விஞ்ஞானிகள் கவலை!

கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்துவதா? நீர்வளத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கண்டனம்..!

ஆளுங்கட்சியினர் துணையோடு கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது: பிரேமலதா குற்றச்சாட்டு..!

இனி தமிழ்நாட்டில் 8 மாதங்களுக்கு வெயில் காலம்தான்.. அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்!

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments