Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டு செலவை குறையுங்கள்: பெட்ரோல் விலையேற்றம் குறித்து அமைச்சர் கருத்து

Webdunia
செவ்வாய், 11 செப்டம்பர் 2018 (07:51 IST)
பெட்ரோல் மற்றும் டீசல் விலையுயர்வை ஏற்றுக்கொண்டு அதற்கு பதிலாக வீட்டு செலவை குறைத்து கொள்ளுங்கள் என்று பொதுமக்களுக்கு ராஜஸ்தான் அமைச்சர் ஒருவர் அறிவுரை கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலையேறி கொண்டே போவதால் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான முக்கிய பொருட்களின் விலையும் ஏறி வருகிறது. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் ராஜஸ்தான் அமைச்சர் ராஜ்குமார் ரின்வா என்பவர் பெட்ரோல், டீசல் விலை குறித்து பொதுமக்களுக்கு அறிவுரையாக கூறியதாவது: மக்களுக்கு பெட்ரோல் விலை ஏன் உயர்ந்து வருகிறது என புரியவில்லை. பெட்ரோலிய பொருட்களின் பயன்பாடு அதிகரிப்பதாலும், சர்வதேச சந்தை காரணமாகவும் அவற்றின் விலை உயர்கிறது. இந்த விலை உயர்வை சமாளிக்க பொதுமக்கள் தங்களது வீட்டு செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் இதனை புரிந்து கொண்டால் மக்களின் வாழ்க்கையில் குழப்பம் இருக்காது என்றும் கூறியுள்ளார்.

அமைச்சர் ரின்வாவின் இந்த கருத்து குறித்து ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் கூறியபோது, 'அமைச்சர் ரின்வா கருத்து ஆணவம் மற்றும் மனிதத்தன்மை அற்றது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments