Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லக்னோ போனவருக்கு லக்கிம்பூர் போக நேரமில்லையா? – பிரதமருக்கு ராகுல் கேள்வி!

Webdunia
புதன், 6 அக்டோபர் 2021 (11:29 IST)
உத்தர பிரதேசம் லக்கிம்பூரில் விவசாயிகள் உயிரிழந்த நிலையில் பிரதமர் மோடி அங்கு செல்லாதது ஏன் என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தர பிரதேசத்தில் மத்திய அமைச்சர் பயணம் செய்தபோது அணிவகுத்த கார் அங்கு போராடிய விவசாயிகளை மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் ஏற்பட்ட கலவரத்தால் மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை காண சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். எதிர்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட நிலையில் மற்ற மாநில முதல்வர்கள் உ.பி வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராகுல்காந்தி உ.பி செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள ராகுல்காந்தி “என்னையும், என் குடும்பத்தினரையும் எவ்வளவு துன்புறுத்தினாலும் விவசாயிகள் பக்கம் நின்று போராடுவோம். நேற்று லக்னோ சென்ற பிரதமர் நரேந்திர மோடி லக்கிம்பூர் செல்லாதது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ராணுவத்திற்கு நன்கொடை கேட்டு மோசடி குறுஞ்செய்தி! போலிகளை நம்ப வேண்டாம்! - இந்திய ராணுவம் எச்சரிக்கை!

பாகிஸ்தான் யூட்யூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை! தவறான தகவல்களை பரப்பியதால் நடவடிக்கை!

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. மகப்பெறு விடுப்பு..! - முதல்வர் மு.க.ஸ்டாலின் அசத்தல் அறிவிப்புகள்!

இன்று ஒரே நாளில் ரூ.560 குறைந்தது தங்கம் விலை.. சவரன் ரூ.72000க்குள் மீண்டும் விற்பனை..!

இரண்டே ஆண்டுகளில் இழுத்து மூடப்பட்ட 28 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்! - அதிர்ச்சி ரிப்போர்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments