Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆங்கிலேயர்கள் குறைத்து மதிப்பிட்டனர்; இந்தியாவின் ஒற்றுமை வலுவானது! – பிரதமர் மோடி உரை!

Webdunia
சனி, 15 ஆகஸ்ட் 2020 (08:34 IST)
நாட்டின் 74வது சுதந்திர தின விழாவில் உரையாற்றி வரும் பிரதமர் இந்தியாவின் ஒற்றுமையை சிலர் குறைத்து மதிப்பிட்டு விட்டதாக கூறியுள்ளார்.

இந்தியாவின் 74வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்த பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

அப்போது பேசிய அவர் “அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர்நீத்த அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கொரோனா காரணமாக இந்த முறை சுதந்திர தின விழா கொண்டாட்டங்களில் குழந்தைகளை காண முடியவில்லை. நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவு போன்ற பேரிடர்களையும் மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.

மேலும் இந்திய சுதந்திர போராட்டம் உலகத்திற்கே ஒரு பெரும் உத்வேகத்தை அளித்திருப்பதாக கூறியுள்ள அவர், இந்தியர்களின் ஒற்றுமையை ஆங்கிலேயர்கள் குறைத்து மதிப்பிட்டதாகவும், ஆனால் இந்தியா தனது போரில் சமரசம் செய்து கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் இந்த சுதந்திர தினத்தில் சுய சார்பு இந்தியாவை நோக்கி நாடு வேகமாக முன்னேறி வருவதாக கூறியுள்ள அவர் நாடு தன்னைறைவு பெறுவதே அரசின் இலக்கு என கூறியுள்ளார்..

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராத் கோலிக்கு பொருத்தமான மகுடம்.. அடுத்த வருடம் சிஎஸ்கே.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments