Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அசாம் வழியாக வந்த பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்! – அசாமில் பரபரப்பு!

அசாம் வழியாக வந்த பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்! – அசாமில் பரபரப்பு!
, வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (15:23 IST)
இந்தியாவில் நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் அசாமில் பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. கொரோனா காரணமாக மக்கள் கூட்டம் இன்றி சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள், அணிவகுப்புகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் சுதந்திர தினத்தை முன்னிட்டு கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில் அசாமலின் உடல்குரி பகுதியில் பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் பதுக்கப்பட்டுள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியில் பரிசோதனையில் ஈடுபட்ட போலீஸார் துப்பாக்கிகள், வெடிக்குண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர். நாளை சுதந்திர தின விழா நடக்க உள்ள நிலையில் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தடைகளை தகர்க்கும் கடவுளுக்கே தடையா? பிள்ளையாருக்காக குரல் கொடுக்கும் முருகன்!