Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய ஆளுநர் எங்கள் ஆதரவாளர்: ஜம்மு மாநில பாஜக தலைவர்

Webdunia
வியாழன், 30 ஆகஸ்ட் 2018 (18:11 IST)
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் சத்ய பால் மாலிக் எங்களுடைய ஆதரவாளர் ஆதரவாளர் என்று மாநில பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா கூறியுள்ளார்.

 
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாஜக, மாநில ஜனநாயக கட்சிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றதை அடுத்து மெஹ்பூபா முஃப்தி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. ஆளுநர் ஆட்சி தொடங்கியது. 
 
இதைத்தொடர்ந்து ஆளுநர் என்.என்.வோஹ்ரா மாற்றப்பட்டார். அண்மையில் சத்ய பால் மாலிக் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில் அம்மாநில பாஜக தலைவர் ரவிந்தர் ரெய்னா, ஆளுநர் குறித்து கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
முன்னாள் ஆளுநர் என்.என் வோஹ்ரா தனது கருத்தில் நிலையாக இருந்ததால் தான் அவரை மாற்றினோம். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கவர்னர் சத்ய பால் மாலிக் எங்களுடைய ஆதரவாளர்தான் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments