Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் மொட்டையடித்த மகிளா காங்கிரஸ் தலைவர்!

Webdunia
திங்கள், 15 மார்ச் 2021 (08:15 IST)
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் மொட்டையடித்த மகிளா காங்கிரஸ் தலைவர்!
தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத கட்சியினர் தங்களது அதிருப்தியை தெரிவிக்கும் வகையில் மாற்றுக் கட்சிக்கு செல்வது உள்பட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் 
 
அந்த வகையில் கேரள மாநில மகிளா காங்கிரஸ் தலைவர் ஒருவரும் தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் மொட்டை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநில மகிளா காங்கிரஸ் தலைவர் லகிதா சுபாஷ் என்பவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மொட்டை அடித்துக்கொண்டார் 
 
திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வந்த அவர் தலையை மொட்டை அடித்துக் கொண்டார். நான் வேறு எந்த கட்சிக்கும் செல்ல மாட்டேன் என்றும் மாவட்டத்தில் ஒரு பெண்ணுக்கு காங்கிரஸ் வாய்ப்பு வழங்கும் என்கிற எதிர்பார்ப்பு நடக்கவில்லை எனவும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments