Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீர் மசோதாவுடன் முடிந்தது மக்களவை: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

Webdunia
செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (20:03 IST)
காஷ்மீர் மாநிலத்தில் 370ஆவது சிறப்பு அந்தஸ்து பிரிவு ரத்து செய்யப்பட்ட நிலையில் நேற்று மாநிலங்களவையிலும், இன்று மக்களவையிலும் இதுகுறித்த மசோதா நிறைவேறியது
 
மக்களவையில் இந்த மசோதாவுக்கு ஆதரவாக 371 வாக்க்குகள் கிடைத்ததால் மசோதா எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நிறைவேறியது. இந்த நிலையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட உடன் மக்களவை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக சபாநாயகர் ஓ.எம்.பிர்லா அவர்கள் இன்று முறைப்படி அறிவித்தார் 
 
இந்த கூட்டத்தொடரில் முத்தலாக் மற்றும் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பிரிவை நீக்குவது ஆகிய இரண்டு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த இரண்டு மசோதாக்களுக்கும் காங்கிரஸ் உள்பட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டிலும் பாஜக பெரும்பான்மை பெற்று இருப்பதால் எந்தவித பிரச்சனையுமின்றி மசோதாக்கள் நிறைவேற்றப்பட முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தமிழகத்தில் திமுக 37 எம்பிக்களை பெற்றிருந்த போதிலும் பாஜகவின் பெரும்பான்மைக்கு எதிராக குரல் கொடுக்க மட்டுமே முடிந்ததே தவிர அந்த மசோதாக்களை நிறைவேற்ற முடியாமல் தடுக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments