Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தீவிரமடையும் காஷ்மீர் விவகாரம் ...முதுகில் குத்தாதீர்கள் .. நெஞ்சில் சுடுங்கள் - ஃபரூக் அப்துல்லா ஆவேசம்

Advertiesment
national news
, செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (16:20 IST)
நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் மசோதா பாஜவின் பெரும்பான்மையோடு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இன்று மக்களவையில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்த மசோதாவின் மீது விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து சலுகை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில்  காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு முக்கிய  கட்சி தலைவர்கள் நேற்று வீட்டு சிறையில் வைக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை சில தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இது அம்மாநிலத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியது. மட்டுமல்லாமல் பல்வேறு கட்சி தலைவர்களும் இதுகுறித்து கேள்வி எழுப்பினர்.
 
இந்நிலையில் தற்போதுவரை காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்களான உமர் அப்துல்லா,லோக் சபா  உறுப்பினரும் முன்னால் முதல்வருமான பரூக் அப்துல்லா ஆகிய தலைவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை என்று காலையில் எம். தயாநிதிமாறம் லோக்சபா சபாநாயகரிடம் கேள்வி எழுப்பினார்.
 
அதன்பின்னர் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஃபரூக் அப்துல்லா கைது செய்யப்படவுமில்லை, வீட்டுக்காவலில் வைக்கப்படவுமில்லை என்று தெரிவித்தார்.
 
இந்நிலையில் தற்போது செய்தியாளர்களைச் சந்தித்த  தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா கூறியதாவது :
 
என்னைக் கைது செய்யவில்லை என அமைச்சர் அமித் ஷா கூறியது தவறு. என் மகன் உமர் அப்துல்லா சிறைவைக்கப்பட்டுள்ளார்.  ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு செய்தது ஜனநாயக விரோத நடவடிக்கை. மேலும் என்னை தடுப்பு காவலில் வைத்துள்ளனர் என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறப்பு அந்தஸ்து திரும்ப கிடைக்குமா? காஷ்மீர் விவகாரத்தில் தலையிடும் உச்ச நீதிமன்றம்!!