Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்: தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருப்பு..!

Siva
ஞாயிறு, 3 நவம்பர் 2024 (09:04 IST)
நான்கு நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் திருப்பதியில் ஏராளமான பக்தர்கள் கூட்டம் குவிந்ததாகவும், இதனால் ஏழுமலையானை தரிசனம் செய்ய 24 மணி நேரத்திற்கு அதிகமாக பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தீபாவளி பண்டிகைக்காக நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்ததால், தீபாவளியை கொண்டாடிவிட்டு சுற்றுலா பயணம் செய்ய பொதுமக்கள் முன்வந்துள்ளனர். ஊட்டி, கொடைக்கானல், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் சுற்றுலா பயணிகள் காணப்படுகின்ற நிலையில், திருப்பதியிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டில் பக்தர்கள் நிரம்பி வழிந்துள்ள நிலையில், நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். இதனால் இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலையில் உள்ளனர். 300 ரூபாய் டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கும் 4 மணி நேரம் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று முன்தினம் மட்டும் 67,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர், மற்றும் அதே நாளில் உண்டியல் காணிக்கையாக இரண்டு கோடியே 38 லட்ச ரூபாய் கிடைத்ததாக தேவஸ்தான அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு வங்கிக்காக கைது செய்வதா? கொல்கத்தாவில் கைதான கல்லூரி மாணவிக்கு நெதர்லாந்து எம்பி ஆதரவு..!

இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

எடப்பாடியை எக்குத்தப்பாய் பேசிய ஆதவ் அர்ஜூனா! - தன் பேச்சு குறித்து வருத்தம்!

தலித்துக்கள் திருமண மண்டபத்தில் திருமணம் செய்வதா? தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments