திடீரென ஆடையை களைந்து போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவி.. கைது செய்த போலீசார்..!

Siva
ஞாயிறு, 3 நவம்பர் 2024 (08:57 IST)
ஈரான் நாட்டில், கல்லூரி மாணவி ஒருவர் திடீரென தனது ஆடைகளை களைந்து போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து, அந்த கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் நாட்டில் பெண்களுக்கு கடுமையான உடை கட்டுப்பாடு இருக்கும் நிலையில், அவற்றை எதிர்த்து போராட முடிவு செய்த கல்லூரி மாணவி ஒருவர் திடீரென தனது ஆடைகளை களைந்து உள்ளாடைகளுடன் போராட்டம் செய்தார்.

இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆன நிலையில், அந்த மாணவியை பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்தனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு, ஹிஜாப் அணியவில்லை என்பதால் 22 வயது இளம்பெண் கைது செய்யப்பட்டு, அவர் போலீஸ் காவலில் இருந்தபோது மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இதனை அடுத்து, அந்நாட்டில் ஹிஜாப் கட்டுப்பாடுகளுக்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஈரானின் கடுமையான இஸ்லாமிய ஆடை கட்டுப்பாட்டை எதிர்க்கும் விதமாகதான் ஆடைகளை களைந்து போராடினேன் என்று கல்லூரி மாணவி கூறிய நிலையில், அவர் கைது செய்யப்பட்டார்.

மேலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும், மனநிலை பிரச்சனை காரணமாகதான் அவர் ஆடைகளை களைந்ததாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Blinkit 'இன்ஸ்டன்ட் மருத்துவர்' சேவை: ஆன்டிபயாடிக் விநியோகத்துக்கு டாக்டர்கள் எதிர்ப்பு

காணாமல் போன 79 வயது பாட்டி.. நெக்லஸில் உள்ள ஜிபிஎஸ் மூலம் கண்டுபிடித்த பேரன்..!

கோவா இரவு விடுதி தீ விபத்து: இண்டிகோவில் உரிமையாளர்கள் தாய்லாந்துக்கு தப்பி ஓட்டம்

விஜய்யை பார்க்க முண்டியடித்த தவெக தொண்டர்கள்.. காவல்துறை தடியடியால் பரபரப்பு..!

வியூகத்தை மாற்றிய தவெக.. பத்தே நிமிடத்தில் பேசி முடித்த விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments