Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருதலைக் காதல் – ஒத்துக்கொள்ளாத பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர் !

Webdunia
வெள்ளி, 11 அக்டோபர் 2019 (12:46 IST)
கேரளாவைச் சேர்ந்த நிதின் என்ற இளைஞர் தன்னைக் காதலிக்க மறுத்த பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் கேரளாவில் பீதியைக் கிளப்பியுள்ளது.

கேரளாவின் எர்ணாகுளம் பகுதியில் நிதின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அருகாமையில் உள்ள காக்கநாடு எனும் பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவரை ஒருதலை பட்சமாகக் காதலித்து வந்துள்ளார். அவரிடம் பலமுறை இது பற்றி பேசியுள்ளதாகவும் ஆனால் அந்த பெண் அதை ஒரு பொருட்டாக கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த நிதின் அந்த பெண்ணைக் கொலை செய்ய திட்டமிட்டு அவரது வீட்டருகே சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த பெண்ணின் மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்தியுள்ளார். பின்னர் தானும் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திக் கொண்டுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணை காப்பாற்றிய அவரது பெற்றோர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அந்த பெண் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments